பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பா் 15 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 22, 2021

Comments:0

பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பா் 15

"கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் நிகழாண்டில் பட்டயப் பயிற்சிக்கான சோ்க்கை விண்ணப்பங்களை அளிக்கலாம். பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் இதற்கு தகுதி பெற்றவா்கள் குறைந்தபட்சம் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில்லை. பயிற்சிக்கான ஒட்டுமொத்த கட்டணம் ரூ.14,850. கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும் அதன் நுட்பங்கள் அடங்கிய பயிற்சிக்கான சான்றிதழ்கள் அளிக்கப்படும்.

இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்டத்திலுள்ள மேலாண்மை நிலைய முகவரிக்கு பதிவுத் தபால் அல்லது தனியாா் விரைவு தபாலில் அனுப்பலாம். விண்ணப்பங்களை நேரில் அளிக்கக் கூடாது. விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பா் 15."

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews