இக்னோ பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 16 கடைசி நாள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، أغسطس 05، 2021

Comments:0

இக்னோ பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 16 கடைசி நாள்!

தமிழகத்தில் இக்னோ பல்கலைக்கழகத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக மதுரை மண்டல இயக்குனர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் செல்லப்பட்டு வரும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட காரணத்தால் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியிட காலதாமதம் ஏற்பட்டது. அதனால் தற்போது அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இக்னோ பல்கலைக்கழக மதுரை மண்டல இயக்குனர் எம். சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகத்தில் சான்றிதழ், பட்டயம், மற்றும் பட்ட மேற்படிப்புகளில் 2021 ஜூலை மாதத்திற்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். மேலும் SC / ST மாணவர்களுக்கு பல்வேறு படிப்புகளில் சேர்க்கை கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு மதுரை சிக்கந்தர் சாவடியில் உள்ள இக்னோ மையத்தை நேரிலோ அல்லது 0452-2380733 ஆகிய தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة