கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர 15.9.21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، أغسطس 21، 2021

Comments:0

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர 15.9.21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம், ஆக. 20: காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சிக் கான சேர்க்கைக்கு வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக் கலாம்.
இது தொடர்பாக காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு. மேலாண்மை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடப்பு நிதியாண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலை யத்தில் நடைபெறவுள்ளது. நகை மதிப்பிடுதல், கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலாண்மை ஆகிய 3 சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகி றது. பயிற்சிக் காலம் 9 மாதங்களாகும்.
பயிற்சிக்கான கட்டணம் ரூ.14,850, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேரலாம்.
இப்பயிற்சிக்கு 16.8.21ஆம் தேதியிலிருந்து வரும் 15.9.21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை காஞ்சி புரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்துக்கு தபால் மூலமாகவோ அல்லது தூதஞ்சல் மூலமாகவோ மட்டும் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் பேர றிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், ஆட்சியர் அலு வலகம் எதிரில், காஞ்சிபுரம்-631501 என்ற முகவரியிலோ அல்லது 044-27237699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளு மாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة