கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - கடைசி தேதி - 15.09.21 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 28, 2021

Comments:0

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - கடைசி தேதி - 15.09.21

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இணைப்பதிவாளர் தகவல்

வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலை யத்தில் முழுநேர பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இணைப்பதிவாளர் திருகுணஐய் யப்பதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேலூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஐய்யப்பதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2021 2022 ஆண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கடந்த 16ம் தேதி முதல் தொடங்கி உள்ளது. இந்த விண்ணப்பங் கள் வரும் 15ம் தேதி வரை www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவி றக்கம் செய்துக் கொள்ளலாம். பயிற்சியில் சேர கல்வி தகுதி பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிபட்ச வயது வரம்பு இல்லை. இந்த பயிற்சியில் கூட்டுறவு மேலாண்மை கணினி மற்றும் நகை மதிப்பீடும் நுட்பங்களும் பயிற்சிகள் அளிக்கப்படும். முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக் கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் 3 சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

வரும் 15ம் தேதிக்குள் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். அதன் பிறகு வரும் விண்ணப் பங்கள் ஏற்கப்படமாட்டது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு தபால் அனுப்பி பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியிருந் தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews