வரும் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஆசிரியர்களுக்கு 30 நாட்களுக்கு ஆங்கில பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 15, 2021

Comments:0

வரும் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஆசிரியர்களுக்கு 30 நாட்களுக்கு ஆங்கில பயிற்சி

டெல்லி கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் என்ற நிறுவனத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழி கற்பித்தல் பாடநெறி சான்றிதழ் என்ற தலைப்பில் வரும் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை 30 நாட்கள் இணைய வழி பயிற்சி பட்டறை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், ஆங்கிலம் பயிற்றுவிக்கும் 25 ஆசிரியர்களும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் 25 ஆசிரியர்களும் மொத்தம் 50 ஆசிரியர்களை இணையவழி பயிற்சிக்கு பரிந்துரை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி சார்பான விவரங்கள் மற்றும் ஆசிரியர்களை பயிற்சிக்கு பரிந்துரை செய்யும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பயிற்சியில் கலந்துகொள்ள அரசு, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களில் ஒரு ஆசிரியரும் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களில் ஒரு ஆசிரியரும் என மொத்தம் தகுதியான 2 ஆசிரியர்களை பரிந்துரை செய்ய வேண்டும். அதற்கான பட்டியலை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு நாளைக்குள் முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட கடிதத்தை விரைவு அஞ்சலில் அனுப்புமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews