அரசு கலைக் கல்லூரிகளில் முதுகலைப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் - இணையதளம் வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு செய்ய இறுதி நாள்- 01.09.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 24, 2021

Comments:0

அரசு கலைக் கல்லூரிகளில் முதுகலைப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் - இணையதளம் வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு செய்ய இறுதி நாள்- 01.09.2021

அரசு கலைக் கல்லூரிகளில் முதுகலைப் படிப்பு: இன்று (ஆக. 24) முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் முதுகலைப் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனக் கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.*

தமிழகத்தில்‌ உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுகலைப் படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasapg.org, www.tngasapg.in என்ற இணையதள முகவரியில்‌ பதிவு செய்யலாம்‌.

விண்ணப்பக்‌ கட்டணம்‌ - ரூ.58. பதிவுக்‌ கட்டணம்‌ - ரூ.2. எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்‌ கட்டணம்‌ ஏதுமில்லை பதிவுக்‌ கட்டணம்‌ - ரூ.2 மட்டும்‌. விண்ணப்பம்‌ மற்றுப்‌ பதிவுக்‌ கட்டணம்‌

விண்ணப்பக்‌ கட்டணம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்கள்‌ Debit Card/ Credit Card/ Net Banking மூலம்‌ இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்‌.

இணையதளம் வாயிலாகக்‌ கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில், ‌"The Director, Directorate of Collegiate Education, Chennai என்ற பெயரில்‌ 23/06/2021 அன்று அல்லது அதற்குப்‌ பின்னர்‌ பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும்‌ செலுத்தலாம்‌.

இணையதளம் வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு செய்யத்‌ தொடங்கும்‌ நாள்‌- 23.08.2021 இணையதளம் வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு செய்ய இறுதி நாள்- 01.09.2021

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews