தமிழக அரசு ஆசிரியருக்கு விடுப்பு கால ஊதியம் – அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يوليو 15، 2021

Comments:0

தமிழக அரசு ஆசிரியருக்கு விடுப்பு கால ஊதியம் – அரசாணை வெளியீடு

தமிழக அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலமாக போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அவர்கள் மீது தொடங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த போராட்ட காலத்தினை விடுப்பு காலமாக அறிவித்து ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு அறிவிப்பு:

தமிழகத்தில் அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலமாக 22.01.2019 முதல் 30.01.2019 வரை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மேலும் பலருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது புதிய அறிக்கை ஒன்றை மாவட்ட கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார். அதில் கரூர்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலகத்தில்‌ கண்காணிப்பாளராகப்‌ பணிபுரிந்து வரும்‌ பொ.ஜெயராம்‌ என்பார்‌, ஜாக்டோ ஜியோ தொடர்‌ வேலை நிறுத்தப்‌ போராட்டத்தில்‌ கலந்து கொண்டு சிறை சென்றமைக்கு 29.012019 முதல்‌ தற்காலிக பணிநீக்கம்‌ செய்யப்பட்டார்‌. அதன் பின்னர் அரசின் ரத்து அறிவிப்பு காரணமாக மீண்டும் 19.02.2079 ல்‌ பணியேற்றுள்ளார்‌. இந்நிலையில் கீழ்க்கண்டவாறு போராட்ட காலத்தினை முறைப்படுத்தி அந்த விடுமுறைகளை பணிக்காலமக அறிவித்து அந்த நாட்களுக்கு உரிய ஊதியம்‌ வழங்க அனுமதித்து அரசாணை வெளியிடப்படுகிறது. மேற்படி போராட்ட காலத்தின்‌ விடுப்பாக 23 நாட்கள்‌ மற்றும்‌ ஊதியமில்லா விடுப்பு நாட்கள்‌ 03 நாட்கள்‌ மொத்தம்‌ 28 நாட்கள்‌ ஊதியமில்லா விடுப்பாக அனுமதிக்கப்பட்டதால்‌. அன்னாருக்கு வழக்கமாக 0101.2020ல்‌ வழங்கப்பட வேண்டிய ஆண்டு ஊதிய உயர்வு 26 நாட்கள்‌ தள்ளி ஏற்கனவே 27.01.2020 முதல்‌ அனுமதிக்கப்பட்டது. தற்போது மேற்படி 26 நாட்களில்‌ 29.01.2018 முதல்‌ 13.02200 முடிய 18 நாட்கள்‌ மட்டும்‌ பணிக்காலமாக முறைப்படுத்தப்பட்டதால்‌. அன்னாருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஆண்டு ஊதிய உயர்வு 37.01.2020க்குப்‌ பதிலாக 11.01.2020 முதல்‌ அனுமதித்து இதன் மூலம்‌ஆணையிடுகிறது. மேலும்‌. உரிய பதிவுகள்‌ சம்மந்தப்பட்ட பணியாளரின்‌ பணிப்பதிவேட்டில்‌ பதியப்‌பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة