பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் கவனத்திற்கு! - பொது அறிவிப்பு: அகரம் ஃபவுண்டேஷன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 10, 2021

Comments:0

பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் கவனத்திற்கு! - பொது அறிவிப்பு: அகரம் ஃபவுண்டேஷன்

அகரம் ஃபவுண்டேஷன்:

இயல்பான வகுப்பறை செயல்பாடுகள் தொடர இயலாது கல்வியாண்டுகள் கடந்து கொண்டு இருக்கிறது.
குழந்தைகளின் எதிர்காலம், பெற்றோர்களின் நிலை இதனை கருத்தில் கொண்டு அகரம் ஃபவுண்டேஷன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறது.

பொது அறிவிப்பு
பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் கவனத்திற்கு

அகரம் ஃபவுண்டேஷன் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம். 2010-இல் தொடங்கப்பெற்ற அகரம் விதைத் திட்டம்'. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் +2 பயின்ற விளிம்புநிலை கிராமப்புற மாணவர்கள். முதல் தலைமுறை பட்டதாரிகள், பெற்றோரை இழந்தவர்கள், தமிழகத்தில் வசிக்கும் ஈழத் தமிழர் அகதிகள் முகாம் மாணவர்கள் போன்றோரே விதை திட்டத்தில் வாய்ப்பு பெறுகின்றனர் ஒத்த கருத்துடைய தன்னார்வலர்கள் இணைந்து மேற்கொள்ளும் தனித்துவமான, வெளிப்படையான. சமூக பொருளாதார அடிப்படையிலான தேர்வுமுறை பின்பற்றப்படுகிறது. அகரம் ஃபவுண்டேஷனின் அர்த்தமுள்ள பயணம் தொடர சமூக அக்கறை கொண்ட கல்வி நிறுவனங்கள். அறச்சிந்தனை கொண்ட நன்கொடையாளர்கள் உடனிருந்து உதவுகின்றனர்.

விதைத் திட்டம் வாயிலாக கடந்த 11 ஆண்டுகளில் 3500 மாணவ மாணவியர்களுக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்பினை அகரம் ஃபவுண்டேஷன் வழங்கி இருக்கின்றது. அவர்களில் 1700 பேர் உயர்கல்வி பெற்று போட்டித் தேர்வுகளில் வெற்றி அடைந்து அரசுப் பணிகளிலும், பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் இருக்கின்றனர். தற்போது 1800 மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகின்றனர். சிறு விதையாக தொடங்கப்பெற்று, ஆயிரக்கணக்கான குடும்பங்களில் இன்று நல் மாற்றங்களை விதைத்துள்ளது விதைத் திட்டம், இந்நிலையில், சமீபகாலமாக அகரம் ஃபவுண்டேஷன் பெயரைப் பயன்படுத்தி சில தனிநபர்கள், அமைப்புகள் சுயநல நோக்கத்துடனும், ஏமாற்றும் எண்ணத்துடனும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தவறாக வழிநடத்துவதாக எங்களின் கவனத்திற்கு தகவல்கள் வருகின்றன. மாணவர்களை நேர்காணல் செய்ய தங்களின் இடங்களுக்கு அழைத்து பதிவுக் கட்டணமாக பணம் வசூலிப்பதாகவும். சில கல்லூரிகளில் 'இலவசம்' என்று கூறி சேர்த்துவிடுவதாகவும், அப்படி சேர்த்துவிட்ட பிறகு கல்லூரிக் கட்டணங்களைச் செலுத்துமாறு பெற்றோர்களை வற்புறுத்துவதாகவும் தெரியவருகிறது. இதுபோன்ற நபர்கள் மற்றும் அமைப்புகளிடம் கவனத்துடன் இருக்க கேட்டுக் கொள்கிறோம்.

அகரம் ஃபவுண்டேஷன், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் பெறுவதில்லை. பணமாகவோ, பொருளாகவோ எதுவும் பெறுவதில்லை. . அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகம் சென்னையில் மட்டுமே இயங்கி வருகிறது. வேறு நகரங்களிலோ, ஊர்களிலோ அலுவலகங்கள் இல்லை. விதை திட்டத்தின் கீழ் மாணவர் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை செயல்பாடுகளை மேற்கொள்ள தனிநபர்களையோ, அமைப்புகளையோ எந்த ஊரிலும் அகரம் நியமிக்கவில்லை.

அகரம் ஃபவுண்டேஷன் பெயரைப் பயன்படுத்தி ஏமாற்றும் நோக்கத்தில் எவராவது உங்களை அணுகினாலோ, பணம் கேட்டாலோ, அவர்களைப் பற்றிய தகவல்களை எங்களுக்குத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் முகவரி: அகரம் ஃபவுண்டேஷன் #15, கிருஷ்ணா தெரு. தியாகராய நகர், சென்னை600017

தொலைபேசி எண்கள் 044 - 43506361, 9841891000 மின்னஞ்சல்! info@agaram.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews