அம்பத்தூர் அரசு ஐடிஐ-யில்சேர பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அம்பத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) கம்மியர் கருவிகள், கோபா, செயலகப் பயிற்சி, கட்டிடப் பட வரைவாளர் தையல்தொழில்நுட்பம் ஆகிய தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு சேர்க்கைக்கு ஆன்லைனில் (www.skilltraining.tn.gov.in) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தையல் தொழில்நுட்பப் பயிற்சியில் சேர 8-ம் வகுப்பு தேர்ச்சியும், இதர பயிற்சிகளில் சேர 10-ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது. சேர்க்கை ஜூலை 1 முதல் நடைபெற்று வருகிறது. பயிற்சியில் சேருவோருக்கு மாதம்தோறும் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும். அதோடு இலவச பஸ் பாஸ், சைக்கிள், லேப்டாப், பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், இரு செட் சீருடை, ஷூ ஆகியவையும் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தையல் தொழில்நுட்பப் பயிற்சியில் சேர 8-ம் வகுப்பு தேர்ச்சியும், இதர பயிற்சிகளில் சேர 10-ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது. சேர்க்கை ஜூலை 1 முதல் நடைபெற்று வருகிறது. பயிற்சியில் சேருவோருக்கு மாதம்தோறும் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும். அதோடு இலவச பஸ் பாஸ், சைக்கிள், லேப்டாப், பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், இரு செட் சீருடை, ஷூ ஆகியவையும் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.