பாடப்புத்தகங்கள் விநியோகத்தில் முறைகேடு - தொடக்க கல்வி அலுவலகத்தில் அதிகார துஷ்பிரயோகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يوليو 19، 2021

Comments:0

பாடப்புத்தகங்கள் விநியோகத்தில் முறைகேடு - தொடக்க கல்வி அலுவலகத்தில் அதிகார துஷ்பிரயோகம்

பாடப்புத்தகங்கள் விநியோகத்தில் முறைகேடு!
பேர்ணாம்பட்டு தொடக்க கல்வி அலுவலகத்தில் அதிகார துஷ்பிரயோகம்

பேர்ணாம்பட்டு தொடக்கக் கல்வி அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வருபவர் உஷாராணி. இவர் தனது பணியை துஷ்பிரயோகம் செய்து பல்வேறு முறைகேடுகளை செய்து வருவதாகவும் பணிக்கு சரியாக வருவதில்லை என்றும். மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் குணசேகரன். தலைமையில் நடைபெறும் தொடக்கக்கல்வி அலுவலர்களின் பெரும்பாலான கூட்டங்களில் கூட உஷாராணி.கலந்து கொள்வதில்லை என்றும் பள்ளிகளுக்கு வழங்கக்கூடிய புத்தகங்களில் வாடகை பணத்தை பள்ளிகளுக்கு கொடுக்காமல் அப்படியே அமுக்கி விட்டார் என்றும்.தப்பு செய்யும் ஒரு சில ஆசிரியர், ஆசிரியைகளை மிரட்டி பணத்திற்கு பதிலாக ஆம்பூரில் உள்ள ஒரு ஜவுளி கடையில் ஜவுளிகள் ஆக பெற்றுக் கொள்கிறார் என்றும். குறிப்பாக பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய புத்தகங்களை ஆங்காங்கு உள்ள பள்ளிகளுக்கு நேரடியாக சென்று வழங்குவது வழக்கம். ஆனால் உஷாராணி. பங்களாமேட்டில் உள்ள தொடக்கக் கல்வியிலேயே அமர்ந்துகொண்டு ஆசிரியர். ஆசிரியைகளை. அலுவலகத்திற்கு வரவழைத்து புத்தகங்களை டெலிவரி செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி ஆய்வாளர் குணசேகரனஆய்வு செய்து தவறு என்று தெரியவரும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة