தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் 1.60 லட்சம் நிவாரண நிதி - அமைச்சர்களிடம் வழங்கினர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 07, 2021

Comments:0

தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் 1.60 லட்சம் நிவாரண நிதி - அமைச்சர்களிடம் வழங்கினர்

தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் 1.60 லட்சம் நிவாரண நிதி
ஆரணியில் அமைச்சர்களிடம் வழங்கினர்
ஆரணி, ஜூலை 7: ஆரணியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் 1.60 லட்சம் கொரோனா நிவா ரண நிதியை அமைச்சர்களிடம் வழங்கினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா 3வது அலையை எதிர்கொள்ளும் வகையில் மருத் துவமனைகளில் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச் சர் எ.வ.வேலு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது, ஆரணி அடுத்த பையூர் எம்ஜிஆர் நக ரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் புருஷோத்தமன், முதல்வரின் நிவாரண நிதிக்கு 31 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர்களிடம் வழங்கினார்.

இதேபோல், முன்னாள் ஆசிரியர் நாராயணசாமி 250 ஆயிரம், மார்க்கெட் சங்க பொருளாளர் சங்கர் கணேஷ் 10 ஆயிரம் என மொத்தம் 260 ஆயிரத்துக் கான காசோலையை வழங்கினர். அப்போது, ஆரணி வட்டார கல்வி அலுவலர் உதயகுமாரன், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன், மாவட்ட கவுன் சிலர் குமரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews