2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டால் அரசு வேலை கிடையாது – புதிய சட்டம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، يوليو 10، 2021

Comments:0

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டால் அரசு வேலை கிடையாது – புதிய சட்டம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு பல கட்டுப்பாடுகளையும் விதித்து புதிய சட்ட திருத்த மசோதாவை வெளியிட்டுள்ளது. இது குறித்த கருத்துக்களை மக்கள் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சட்ட மசோதா:

இந்திய நாட்டின் மக்கள் தொகை 138 கோடியை தாண்டி வருகிறது. இது தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச அரசு தனது மாநிலத்தில் உள்ள மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக பல அறிவிப்புகளை கொண்ட சட்ட வரைவு மசோதா ஒன்றை தனது மாநில சட்ட கமிஷன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஜூலை 19ம் தேதி வரை இந்த மசோதா குறித்த கருத்துக்களை மக்கள் தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அரசின் மசோதாவில், 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் யாரும் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு இல்லை. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும். 2 குழந்தை மட்டும் பெற்றவர்களுக்கு பணிக்காலத்தில் 2 முறை ஊதிய அதிகரிப்பு செய்யப்படும் அல்லது 12 மாத மகப்பேறு விடுமுறையும் முழு சம்பளத்துடன் வழங்கப்படும். தேசிய பென்ஷன் திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பில் 3% படி அதிகமாக தரப்படும். மேலும், மாநிலத்தின் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு மையங்கள் அமைக்க வேண்டும். மகப்பேறு மையங்களில் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் சேர்த்து கருத்தடை மாத்திரைகள் மற்றும் காண்டம்கள் போன்றவற்றை விநியோகம் செய்து, குடும்ப கட்டுப்பாடு முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கர்ப்பிணிகள், குழந்தை பிறப்பு மற்றும் இறப்பு குறித்து கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة