28 லட்ச அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – உத்திர பிரதேச அரசு உத்தரவு வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يوليو 29، 2021

Comments:0

28 லட்ச அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – உத்திர பிரதேச அரசு உத்தரவு வெளியீடு!

உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படியினை உயர்த்த முடிவு செய்து அதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி, மாநிலத்தில் இருக்கும் 28 லட்ச அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளது.

அகவிலைப்படி உயர்வு:
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள 16 லட்ச அரசு ஊழியர்களுக்கும் 12 லட்ச ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும் அகவிலைப்படி உத்தரவினை உடனடியாக உருவாக்குமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் நிதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்று நோயை தொடர்ந்து ஏற்பட்ட நிதி அழுத்தத்தால் 2020 ஆம் ஆண்டில் டிஏ திருத்தம் நிறுத்தப்பட்டது. ஜூலை 1 வரை அகவிலைப்படி அதிககரிக்கப்படாது என்று உத்திர பிரதேச அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது. அகவிலைப்படி ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் அதிகரிக்கப்படுகிறது. இந்த திருத்தத்தினை நிறுத்தி வைத்ததால், அரசாங்க ஊழியர்கள் மூன்று முறை தங்களுக்கு கிடைக்க வேண்டிய அகவிலைப்படியினை இழந்துள்ளனர். இது குறித்து அந்த மாநிலத்தின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது ‘ஜூலை 14 ஆம் தேதி அடிப்படை சம்பளத்தில் 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக டிஏ திருத்தம் செய்யப்படுவதாக அறிவித்தது. மாநிலமும் இதைப் பின்பற்றும், இது குறித்து உடனடியாக ஒரு திட்டத்தை உருவாக்குமாறு முதலமைச்சர் நிதித்துறையினரிடம் கேட்டு கொண்டார். இதனால் மாற்றத்தை விரைவாக செயல்படுத்த முடியும்’ இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, அரசு அறிவித்துள்ள இந்த புதிய அறிவிப்பு ஜூலை 1 முதல் பொருந்தும் என்றும் அதுவரை ஜூலை 1, 2019 ஆம் தேதி திருத்தப்பட்ட விகிதங்களே பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கோவிட் -19 காரணமாக மாநிலத்தின் வருவாய் சரிந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதாகவும் கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு, மேலாண்மை, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அரசாங்கத்திற்கு நிதி தேவைப்பட்டது. அரசு தீர்மானித்த படி ஜனவரி 1, 2020 முதல் உ.பி அரசு 4% அதிகரித்திருக்கும், ஆனால் தொற்றுநோய் காரணமாக முடிவை நிறுத்த வேண்டியிருந்தது என்று அந்த அதிகாரி கூறினார். ஜூலை 2020 மற்றும் ஜனவரி 2021 ல் அகவிலைப்படி எவ்வளவு திருத்தப்பட்டிருக்கும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மாநில அரசு ஊழியர்கள், உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة