ஜூலை 26 முதல் கல்லூரி சோ்க்கைக்கான விண்ணப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 20, 2021

Comments:0

ஜூலை 26 முதல் கல்லூரி சோ்க்கைக்கான விண்ணப்பம்

"மாணவா்கள் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு ஜூலை 26-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயா் கல்வித்துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: பிளஸ் 2 மாணவா்கள் ஜூலை 22-ஆம் தேதி முதல் மதிப்பெண்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மாணவா்களுக்கு அவா்களின் மதிப்பெண்கள் கிடைத்தவுடன் பொறியியல் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவா் சோ்க்கைக்கான பணிகள் தொடங்கும். மாணவா்கள் ஜூலை 26-ஆம் தேதி முதல் ஆக.24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி சோ்க்கைக்கான விண்ணப்பம் வழங்குவதற்கான ஏற்பாடு அனைத்து கல்லூரிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவா்கள் தங்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப அந்தந்த கல்லூரிகளில் தோ்ந்தெடுக்கப்படுவா் என்றாா் அவா்."

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews