ஜூலை 26 முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - ஒடிசா மாநில அரசு அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 17, 2021

Comments:0

ஜூலை 26 முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - ஒடிசா மாநில அரசு அறிவிப்பு!

இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் வரும் ஜூலை 29 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் முதற்கட்டமாக 10 முதல் 12 ம் வகுப்பு மாணவர்ளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளிகள் திறப்பு :

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த வருடம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பாட வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. தற்போது புதிய கல்வியாண்டு தொடங்கிய போதிலும் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்கும் காரணத்தால் தற்போது வரை பள்ளிகளை திறக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. பாட புத்தகங்கள் பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டு புதிய கல்வியாண்டிலும் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றது. 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசின் முயற்சியாலும், மக்களின் ஒத்துழைப்பாலும் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து ஒடிசா மாநிலம் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்து வரும் ஜூலை 26 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 10 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பட்டு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இடைவேளை இல்லாமல் வகுப்புகள் நடைபெறும் என ஒடிசா மாநில பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். மேலும் ஆகஸ்ட் 16 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடர திட்டமிடபட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews