குஜராத்தில் ஜூலை 15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு - முதல்வர் விஜய் ரூபானி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 09, 2021

Comments:0

குஜராத்தில் ஜூலை 15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு - முதல்வர் விஜய் ரூபானி அறிவிப்பு

குஜராத்தில் ஜூலை 15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் நேற்று 62 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதேசமயம் கரோனாவிலிருந்து 534 பேர் குணமடைந்தனர். தற்போதைய நிலவரப்படி 1,497 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் குஜராத்தில் 100க்கு கீழ் கரோனா பரவல் குறைந்ததையடுத்து ஜூலை 15 முதல் 12ஆம் வகுப்புக்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

மேலும் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான கல்லூரிகளும் ஜூலை 15ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் பள்ளி, கல்லூரிகளில் வருகைப்பதிவு என்பது கட்டாயம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews