மூன்று மாநிலங்களில் 12-ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يوليو 27، 2021

Comments:0

மூன்று மாநிலங்களில் 12-ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு

மூன்று மாநிலங்களில் 12-ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு
புவனேசுவரம், ஜூலை 26: ஒடிஸா, பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி வகுப்பு கள் திங்கள்கிழமை தொடங்கின.

கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அதிகரித்ததால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் ஒடிஸா, பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் திங்கள்கிழமை தொடங் கின.
10,11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வரும் நாள்களில்படிப்ப டியாக வகுப்புகள் தொடங்கப்படும் என்று சம்பந்தப்பட்ட மாநிலங் களில் அறிவித்துள்ளன. பள்ளிகளுக்கு வருவது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் வருகைப் பதிவு திங்கள்கிழமை குறைவாகவே இருந்தது. பள்ளிகளுக்கு வரும் மாண வர்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்று வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة