தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்த வேண்டும் – மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يونيو 17، 2021

Comments:0

தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்த வேண்டும் – மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசுக்கு கோரிக்கை:
தமிழகத்தில் அரசு பள்ளிகள் மூலம் ஏராளமான ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை, கல்வியில் தரம் இல்லை என பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இந்த காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்தது. ஏழை, எளிய மக்கள் கூட தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்ப தயாராக இல்லை. அதிக அளவு பணத்தை கட்டி தனியார் பள்ளிகளை நாடி சென்றனர். அதன் பிறகு தமிழக அரசு, அரசு பள்ளிகளில் ஆர்வம் காட்டியது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டது. அரசின் சலுகைகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது. மருத்துவப் படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பாட புத்தகம் இலவசம் இன்னும் பல நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த ஆண்டும் கூடுதலாக இரண்டு லட்சம் மாணவர்கள் சேரும் வாய்ப்புண்டு என கல்வியாளர்கள் கூறுகின்றனர். மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தரமான நூலகங்கள், ஆய்வகங்கள், காற்றோட்டமான வகுப்பறை, சுகாதாரமான குடிநீர், சுத்தமான கழிப்பறை, ஆரோக்கியமான மதிய உணவு, நவீன விளையாட்டு உபகரணங்கள் என நம் அரசு பள்ளிகளை, தனியார் பள்ளிகளை விட பன்மடங்கு மேம்பட்டதாக மாற்ற வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசுக்கு இதைச் செய்யும் ஆற்றல் உண்டு என நான் நம்புகிறேன் என கூறியுள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة