தடுப்பூசி செலுத்தி கொண்டால் தங்க நாணயம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يونيو 08، 2021

Comments:0

தடுப்பூசி செலுத்தி கொண்டால் தங்க நாணயம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

பீகார் மாநிலம் பாட்னாவில் 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநிலத்தில் உள்ள ஷீஹோர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தினால் பரிசு:
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த் தடுப்பூசிகளை இரண்டு டோஸ் செலுத்தி கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நோய் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசிகள் செலுத்தி கொள்வது அவசியமானதாகும். கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க தற்போது ஒரே தீர்வாக தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தடுப்பு மருந்துகள் குறித்து சில தவறான புரிதல்கள் மக்களிடம் உள்ளது. இதனால் பலர் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள முன்வருவதில்லை. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் 100 சதவீதம் இறப்பிலிருந்து தப்பிக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பீகார் மாநிலம் ஷீஹோர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் அதிக நபர்கள் தடுப்பூசிகள் செலுத்தி கொள்ளவில்லை என தகவல்கள் வந்துள்ளது. இதையடுத்து அந்த மாவட்ட நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தடுப்பூசிகள் செலுத்தி கொண்டால் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அங்குள்ள கிராமங்களில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் 45 வயதுக்கு மேற்பட்டோராக உள்ளனர். அதனால் வரும் ஜூலை 15க்குள் அனைவரும் தடுப்பூசி என்ற இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கி விட்டால் கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவே மக்கள் வெகு விரைவாக தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை தடுப்பூசி செலுத்தியர்களில் 5 பேரை தேர்வு செய்து தங்க நாணயம், மைக்ரோவேவ், பிரிட்ஜ் போன்ற விட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படும் என ஷீஹோர் மாவட்டம் அறிவித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة