தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள். 31.05.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يونيو 02، 2021

Comments:0

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள். 31.05.2021

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை – 6.
ந.க.எண். 06124 / அ1/2021, நாள். 31.05.2021.
கொரோனா வைரஸ் நோய் தொற்று (கோவிட் -19) சார்பாக அரசு மேற்கொண்டு வரும் தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக அரசு அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத் தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க அனுமதித்து வழங்கப்பட்டுள்ள அரசாணையின் நகல் உரிய நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படுகிறது. தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து பார்வையில் கண்ட அரசாணை வாயிலாக பெறப்படும் முதலமைச்சரின் நிவாரண நிதி விவரங்களை ஒன்றியவாரியாக தொகுத்து மாவட்ட அளவில் விவரங்களை அனுப்புவதற்கு மாவட்ட பற்றாளராக (Nodal Officer) முதன்மைக் கல்வி அலுவலர்கள் செயல்பட தெரிவிக்கப்படுகிறது. மேலும் அரசாணையில் கண்டுள்ள அறிவுரைகளை தவறாது பின்பற்றி தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பாக பெறப்படும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கான விவரங்களை (பெயர், பதவி, பணிபுரியும் பள்ளி / அலுவலகம் மற்றும் தொகை) ஒன்றியவாரியாக மாவட்ட அளவில் தொகுத்து அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة