பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - ஜூன் 30–இல் கலந்தாய்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، يونيو 27، 2021

Comments:0

பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - ஜூன் 30–இல் கலந்தாய்வு

பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு
ஜூன் 30–இல் கலந்தாய்வு
சென்னை, ஜூன் 26: பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நி லைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஜூன் 30-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இது குறித்து பழங்குடியினர் நல இயக்குநர் வி.சி.ராகுல் பழங்கு டியினர் நல திட்ட அலுவலர்கள், தொடர்புடைய பள்ளித் தலை மையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு பழங்கு டியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரி யர் பதவி உயர்வு வழங்கிட 1.1.2021 அன்றைய நிலையில் தெரிவுப் பட்டியல் வெளியிட்டு ஆணையிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு ஜூன் 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள பழங்குடியினர் நல இயக் குநரகத்தில் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இந்தக் கலந்தாய்வு நாளன்று கரோனா முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். இந்த ஆணை யினை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரியும் வகையில் தக வல் பலகையில் வைத்தும், அனைவருக்கும் சுற்றுக்கு அனுப்பி கையெழுத்து பெறுமாறும் தொடர்புடைய கட்டுப்பாட்டு அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة