புதுச்சேரியிலும் +2-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يونيو 07، 2021

Comments:0

புதுச்சேரியிலும் +2-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரியிலும் +2-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!
புதுச்சேரி அரசு முதலமைச்சர் அலுவலகம்
செய்திக் குறிப்பு
புதுச்சேரி, 07.06.2021
மாணவர்களின் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி அறிவிப்பு. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் முறையே 12353 மற்றும் 2321 மாணவர்கள் 2020-21 ஆம் கல்வி ஆண்டில் தமிழ் நாடு பாடத்திட்டத்தின் கீழ் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். கொரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறாது என்று அறிவிக்கப்படுகிறது

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة