2457 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப்பலன்களின் நிலுவைத்தொகை ₹497.32 கோடி வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் - செய்தி வெளியீடு எண்:202 - நாள்:02.06.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يونيو 02، 2021

Comments:0

2457 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப்பலன்களின் நிலுவைத்தொகை ₹497.32 கோடி வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் - செய்தி வெளியீடு எண்:202 - நாள்:02.06.2021

2457 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப்பலன்களின் நிலுவைத்தொகை ₹497.32 கோடி வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
செய்தி வெளியீடு எண்:202
நாள்:02.06.2021
செய்தி வெளியீடு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (2.6.2021) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரையிலான காலக்கட்டங்களில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயன்களின் நிலுவைத் தொகையான ரூ.497.32 கோடியினை 2457 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக, 6 ஓய்வு பெற்ற போக்குவரத்துக் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆர். எஸ். ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப, முதன்மை நிதி அலுவலர், மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة