கொரோனா சிகிச்சை பணிக்காக 100 செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற அழைப்பு - ஜுன் 3ம் தேதி நேர்காணல். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 01, 2021

Comments:0

கொரோனா சிகிச்சை பணிக்காக 100 செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற அழைப்பு - ஜுன் 3ம் தேதி நேர்காணல்.

கோயம்புத்தூர் மாநகராட்சி
பத்திரிக்கை செய்தி
செவிலியர்கள் தேவை
செ.வெ.எண் :186
நாள்:01.06.2021
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு கொரோனா தடுப்பு பணிக்கென 100 தற்காலிக செவிலியர்கள் மூன்று மாத காலத்திற்கு நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.12,000/- தொகுப்பூதியம் வழங்கப்படும். தகுதியுடைய நபர்கள் (செவிலியருக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி B.Sc Nursing/Diploma Nursing தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்) 03.06.2021 காலை 10.00 மணிக்கு கீழ்காணும் அனைத்து அசல் மற்றும் ஒரு நகல் ஆவணங்களுடன் டவுன்ஹால் அருகில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு கோரப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.. அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

1.கல்விச் சான்றிதழ்கள்
2.இருப்பிட சான்று
3.சாதிச் சான்று
4.ஆதார் அட்டை
வெளியீடு:- மக்கள் தொடர்பு அலுவலகம், கோயம்புத்தூர் மாநகராட்சி.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews