பள்ளிக்கல்வி - மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு நடத்துதல் சார்ந்து - கருத்துக் கேட்டறிதல் சார்பு - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள் - நாள் 02.06.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يونيو 02، 2021

Comments:0

பள்ளிக்கல்வி - மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு நடத்துதல் சார்ந்து - கருத்துக் கேட்டறிதல் சார்பு - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள் - நாள் 02.06.2021

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள்
சென்னை
ந.க.எண்.344062பிடி 1/2020 நாள் 02.06.2021
பள்ளிக்கல்வி மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு நடத்துதல் சார்ந்து - கருத்துக் கேட்டறிதல் சார்பு
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மே மாதத்தில் நடத்தப்பட இருந்தது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது 07.06.21ம் தேதி முடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இச்சூழ்நிலையில் மாணவர்களுக்கு மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மாணவர்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் கருத்துக்களை இணையவழியாக (31.06.2021 அன்று தொடர்பு கொண்டு கேட்டறிந்து அதன் அறிக்கையினை இவ்வியக்ககத்திற்கு அனுப்பிடத் தக்க வகையில் தயார் நிலையில் வைத்திருக்குமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தலைமையாசிரியர்கள்: மூலமாக அவர்களது பள்ளிகளைச்சார்ந்த மாணவர்கள், பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதன் விவரத்தை தொகுத்து முதன்மைக்கல்வி அலுவலகத்தில் அளித்திட தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة