கொரோனா பரவலால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்தி வைப்பு: தேர்வாணையம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 30, 2021

Comments:0

கொரோனா பரவலால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்தி வைப்பு: தேர்வாணையம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப பணியாளர்கள் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் 08.06.2021 முதல் 11.06.2021 வரை நடைபெற இருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை 2, தமிழ்நாடு போக்குவரத்து சார் நிலைப்பணிகள் 2013-2018, பணிக்கான நேர்முகத் தேர்வு தற்போது நிலவும் கொரோனா தொற்று பரவல் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது.

இந்த பதவிகளுக்கான நேர்முகத் தேர்வின் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதேபோன்று 29.05.2019ல் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள், 2008-2019, உதவி மின் ஆய்வாளர் 2. உதவி பொறியாளர் (மின்சாரம்) (பொதுப்பணித்துறை), தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் பதவிகளுக்கான கலந்தாய்வு தேதியும் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், 22.06.2021 முதல் 30.06.2021 வரை நடைபெற இருந்த துறைத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகிறது. மேலும் முடிவுகள் வெளியிடப்படாத 14 துறைத் தேர்வுகளின் முடிவுகள் 20.07.2021 அன்று வெளியிடப்படும். விண்ணப்பதாரர்களின் நலன் கருதி, துறைத் தேர்வுகள் மே 2021 க்கு விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 31.07.2021 என மாற்றம் செய்யப்படுகிறது. இத்தேர்வானது வரும் ஆகஸ்டு மாதம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews