+2 மாணவர்களுக்கு மாதிரி பொதுத்தேர்வு நடத்துதல் - தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، مايو 16، 2021

Comments:0

+2 மாணவர்களுக்கு மாதிரி பொதுத்தேர்வு நடத்துதல் - தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்

+2 மாணவர்களுக்கு மாதிரி பொதுத்தேர்வு நடத்துதல் - தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்
மேற்காண் பொருவின் படி இராணிப்பேட்டை மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் எழுதவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் முழு பாடத்திட்டத்தில் மாதிரிப் பொதுத் தேர்வுகள் கீழ்கண்ட நாட்களில் நடைபெறுதல் வேண்டும் . இது சார்ந்து பின்வரும் அறிவுரைகளை பின்பற்றி தேர்வுகளை நடத்திட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 1 அனைத்து பாடங்களுக்கும் மாதிரிப் பொதுத் தேர்வுகள் நடைபெறும் 2. மாதிரி தேர்வுகள் தொடர்பான வினாக்கள் தேர்வு நடைபெறும் நாளன்று முதன்மை கல்வி
2. அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் Whatsapp மூலமாக தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
3. தலைமை ஆசிரியர்கள் பாடஆசிரியர்களுக்கு Whatsappமூலம் வினாத்தாள்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
4. பாடஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு Whatsapp மூலமாக வினாத்தாள்களை அனுப்பி தேர்வு எழுத அறிவுறுத்த வேண்டும். 5. மாணவர்கள் வினாத்தாள்களை தங்களது மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து கொண்டு தனித்தாளில் விடைகளை எழுதி இறுதியில் மாணவர் கையொப்பம் இட்டு பாட ஆசிரியரின் Whatsapp க்கு அனுப்பி வைக்க வேண்டும்.
6. பாட ஆசிரியர்கள் இதனை மதிப்பீடு செய்து மதிப்பெண் பட்டியல் தயாரித்து அதன் ஒரு நகலை தலைமை ஆசிரியர் வழியாக சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.
7. வகுப்பு ஆசிரியர்கள் பாட ஆசிரியரிடம் இருந்து மதிப்பெண் பட்டியலை பெற்று தொகுத்து தொகுப்பு மதிப்பெண் பட்டியல் தயார் செய்து வைத்திருக்க வேண்டும். 8. தலைமை ஆசிரியர்கள் வகுப்பு ஆசிரியர்களிடமிருந்து தொகுப்பு மதிப்பெண் பட்டியலை பெற்று பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
9. தொகுப்பு மதிப்பெண் பட்டியலை ஒவ்வொரு மாதிரி தேர்வு முடிந்த இரண்டு நாட்களுக்குள் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة