2016-17ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட 19 பள்ளிகளின் 95 பட்டதாரி ஆசிரியர்களுக்கு (G.O.No.14, Dated: 13.01.2017)ஏப்ரல் - 2021 க்கான ஊதிய கொடுப்பாணை!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، مايو 04، 2021

Comments:0

2016-17ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட 19 பள்ளிகளின் 95 பட்டதாரி ஆசிரியர்களுக்கு (G.O.No.14, Dated: 13.01.2017)ஏப்ரல் - 2021 க்கான ஊதிய கொடுப்பாணை!!!

பள்ளிக் கல்வி 2016-17 ஆம் கல்வியாண்டில் தரமுயர்த்தப்பட்ட 19 உயர்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 95 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு ஏப்ரல் 2021-ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை வழங்குதல் - சார்ந்து.
பார்வை:
1. அரசாணை (டி) எண்.14, பள்ளிக்கல்வி[அகஇ)]துறை, நாள் 13.01.2017.
2. அரசாணை (1டி) எண்.390, பள்ளிக்கல்வி [பக5(1)] துறை,
நாள் 24.05.2018. 3. பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித ந.க.எண். 001510/எல்/
இ3/2021, நாள் 23.04.2021.
பார்வை 1ல் காணும் அரசாணையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, 2016-17 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் 19 நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், அவ்வாறு தரமுயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 19 உயர்நிலைப் பள்ளிகளுக்கு 95 (19x5) பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டும் ஆணைகள் வெளியிடப்பட்டன. அப்பணியிடங்களுக்கு பார்வை 2-ல் காணும் அரசாணையின்படி கடைசியாக, 14.01.2018 முதல் 31.12.2020 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 2) மேற்காணும் தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் மேலும் மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் அரசிற்கு கருத்துரு அனுப்பியுள்ளார். மேலும், இப்பணியிடங்களுக்கு, ஏப்ரல் 2021-ஆம் மாதத்திற்கு ஊதியம் பெறத்தக்க வகையில் ஊதியம் வழங்க ஊதிய கொடுப்பாணையினை (Pay Authorization) வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

3) பார்வை 1ல் குறிப்பிட்டுள்ள தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி

இயக்குநரின் கருத்துரு, அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், இக்கடிதத்தின் இணைப்பில் கண்டுள்ள பணியிடங்களுக்கு ஏப்ரல் 2021 ஆம் மாதத்திற்கான ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான ஏப்ரல் 2021-ம் மாதத்திற்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும்பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة