மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி – ஜூலை 1 முதல் வழங்கப்படும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، مايو 05، 2021

Comments:0

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி – ஜூலை 1 முதல் வழங்கப்படும்

2020 ஆம் ஆண்டு மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்த அகவிலைப்படியினை ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதலே அனைத்து ஊழியர்களும் பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் மத்திய அரசாங்க துறை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அகவிலைப்படி கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது மத்திய அரசு அரசு துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பல சலுகைகளை ரத்து செய்தது. இதன் காரணமாக பலரும் பாதிப்படைந்து வந்தது. அதில் ஒன்று தான் அகவிலைப்படி நிறுத்தம். இதனை அடுத்து பல அரசாங்க ஊழியர்களும் இது குறித்து மத்திய அரசாங்கத்திடம் இதனை மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு செவிசாய்த்துள்ள மத்திய அரசு வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அனைவரும் நிலுவையில் உள்ள அகவிலைப்படி வழங்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளது. இந்த செய்தியினை நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆண்டுதோறும் இரு முறை உயர்த்தப்படும் அகவிலைப்படி இந்த ஆண்டு உயற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அகவிலைப்படி 17 சதவீதமாக இருக்கின்றது, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة