ராணுவ ஆள் சேர்ப்புக்கான நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، أبريل 21، 2021

Comments:0

ராணுவ ஆள் சேர்ப்புக்கான நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு

கோவையில் நடக்க இருந்த ராணுவ ஆள் சேர்ப்புக்கான பொது நுழைவுத்தேர்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்ட 'ரிசல்ட்' 2 வாரத்தில் வெளியிட திட்டம்
ராணுவ ஆள்சேர்ப்பு மைய இயக்குனர் கர்னல் ராவத் வெளியிட்ட அறிக்கை:ராணுவ வீரர் (தொழில்நுட்பம்), உதவி செவிலியர், எழுத்தர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கான ஆள் சேர்ப்பு கோவையில் கடந்த ஜன., மாதம் நடந்தது. இதில், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர் ஆகிய, 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கான பொது நுழைவுத்தேர்வு ஏப்.25ம் தேதி கோவை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று காரணத்தால், நுழைவுத்தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு.: பள்ளிக்கல்வித்துறை
ஏற்கனவே வழங்கப்பட்ட நுழைவு சீட்டுகள் ரத்து செய்யப்படுகின்றன.பொது நுழைவுத் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அறிவிப்புகளை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة