பள்ளி ஆசிரியர்களுக்கும் இணையவழி பணி - தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 22, 2021

Comments:0

பள்ளி ஆசிரியர்களுக்கும் இணையவழி பணி - தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

பிளஸ்2 வினாத்தாள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு
ஆசிரியர்கள் வீட்டிலிருந்து இணையவழியில் பணியாற்ற அனுமதிக்க கோரிக்கை
புதுக்கோட்டை:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் நா.சண்முகநாதன் விடுத்துள்ள அறிக்கை: கரோனா பரவலால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவோர் வீட்டில் இருந்து இணைய வழியாக பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே பள்ளிக்கு வந்து செல்கின்றனர். பள்ளிகளுக்கு மாணவர்கள் வராத நிலையில், பள்ளிக்கு ஆசிரியர்கள் அன்றாடம் வந்து செல்வது தேவையற்றது.
கல்வி தொலைக்காட்சிகளின் காணொலி பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும் - முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
எனவே, கரோனா 2-வது அலை பரவல், கோடை வெயிலின் உக்கிரம், ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியிலான பாதிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் வீட்டில் இருந்து இணையவழியில் பணியாற்றும் வகையில் தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews