ஒவ்வொரு பள்ளியிலும் அறிவியல் சங்கம் அமைக்க வேண்டும்: வட்டார கல்வி அதிகாரி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، مارس 04، 2021

Comments:0

ஒவ்வொரு பள்ளியிலும் அறிவியல் சங்கம் அமைக்க வேண்டும்: வட்டார கல்வி அதிகாரி

மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பாக அறிவு வளர்ச்சிக்கு ஒவ்வொரு பள்ளியிலும் அறிவியல் சங்கம் தொடங்க வேண்டும் என்று பங்காருபேட்ைட தாலுகா வட்டார கல்வி அதிகாரி பி.பி.கெம்பையா ஆலோசனை வழங்கினார்.
தேர்தல் பணிகளில் இருந்து விலக்கு அளிக்க முதுநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தல்!
பங்காருபேட்டை தாலுகா அறிவியல் ஆய்வு மையத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசும்போது, உலகம் தற்போது மிகவும் வேகமாக சுழன்று கொண்டுள்ளது. புதிய கண்டுப்பிடிப்புகள் மக்களிடம் புழக்கத்தில் வருவதற்கு முன் மற்றொரு புதிய கண்டுப்பிடிப்புகளை விஞ்ஞானிகள் அறிமுகம் செய்கிறார்கள். இதற்கெல்லாம் அச்சாணியாக இருப்பது அறிவியல் மட்டுமே. நாம் பள்ளியில் படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பாக பல தகவல்கள் சொல்லி கொடுக்க வேண்டும். விஞ்ஞானிகளை அறிமுகம் செய்வதுடன் அவர்கள் என்னென்ன கண்டுப்பிடித்துள்ளனர். அதனால் மனித சமூகம் அடைந்து வரும் நன்மைகள் என்னவென்பதையும் சொல்லி ெகாடுக்க வேண்டும். சுற்றுச்சூழல், வனமேம்பாடு அவசியத்தையும் இளம் வயதில் மூடநம்பிக்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்க வேண்டும். மாணவர்களுக்கு அறிவியில் சார்ந்த ஞானம் கிடைக்க வேண்டுமானால் ஒவ்வொரு பள்ளியிலும் அறிவியல் சங்கம் தொடங்க வேண்டும்.
08.03.2021 திங்கள் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மாதத்திற்கு ஒருநாள் அறிவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட விஷயங்களை சொல்லி ெகாடுக்க வேண்டும். இதன் மூலம் சிறந்து விஞ்ஞானிகளை நாம் உருவாக்க முடியும். கல்வி அறிவு இல்லாத காலத்தில் பல மேதைகள் உருவாகியுள்ளனர். தற்போது கூகுல் போன்ற அறிவு களஞ்சியங்கள் அதிகம் உள்ளது. அதை நல்ல தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்’’ என்றார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة