தேர்தல் பணியில் இருந்து விலக்களிக்க பிளஸ் 2 ஆசிரியர்கள் கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، مارس 08، 2021

Comments:0

தேர்தல் பணியில் இருந்து விலக்களிக்க பிளஸ் 2 ஆசிரியர்கள் கோரிக்கை!

பணி நிரந்தரம் கோரி போராட்டம்: பகுதி நேர ஆசிரியா்களுக்கு ஒரு வாரம் சம்பளம் பிடித்தம்.
தேர்தல் பணியில் இருந்து, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு, விலக்கு அளிக்க வேண்டும் என, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் மனு கொடுத்துள்ளனர். பணி நிரந்தரம் கோரி போராட்டம்: பகுதி நேர ஆசிரியா்களுக்கு ஒரு வாரம் சம்பளம் பிடித்தம்.
அதில், கூறியிருப்பதாவது: கொரோனா காரணமாக, நீண்ட விடுமுறைக்கு பின் கடந்த ஜன., 19 முதல், பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மே 2ல் பொதுத்தேர்வு நடக்கவுள்ளது. இதனால் வாரத்தில், ஆறு வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு, ஆசிரியர் தொய்வின்றி, முழு ஈடுபாட்டுடன் பாடங்களை கற்பிக்கும் வகையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு, தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். பணி நிரந்தரம் கோரி போராட்டம்: பகுதி நேர ஆசிரியா்களுக்கு ஒரு வாரம் சம்பளம் பிடித்தம்.
மேலும், 55 வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோயாளிகள், டயாலிசிஸ் செய்து கொள்பவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கும், தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஓட்டுப்பதிவு நடக்கும் அன்று, பணி முடிந்து வீடு திரும்ப நள்ளிரவுக்கு மேல் ஆவதால், வாகன வசதி இன்றி பெண் ஆசிரியர்கள் அவதியடைவது தொடர்கிறது. பெண் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி, தேர்தல் ஆணையம், அவர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة