கணினி பயிற்றுநர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படவில்லை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் -RTI பதில் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، مارس 08، 2021

2 Comments

கணினி பயிற்றுநர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படவில்லை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் -RTI பதில்

தமிழகத்தில் நடைபெற்ற கணினி ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு வினா கூட தமிழ் மொழியில் இடம் பெறவில்லை என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் RTI வாயிலாக பதில் தந்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்படவில்லை என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது 150 வினாக்களும் முற்றிலும் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மொழியை தாய் மொழியாய் கொண்டவர்களின் விவரம் தனியாக பராமரிக்கப்படவில்லை என்பதையும் கூறியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media-Bulletin - 07.03.2021 - PDF

هناك تعليقان (2):

  1. கு..ரேசன் அவர்களே ,
    விளக்கம் வேண்டும்,

    நான் நேர்மையான முறையில் தேர்வு எழுதியதால் தான் வழக்கு(வ.எண். WP 9330/2020) தொடர்ந்து நீதிமன்ற ஆணைப்படி பணிநியமனம் பெற்றேன்.

    உன்னை போன்று மற்றவர்களின் மீது பட்டா கத்தி தொங்கதுனு,அறுவா கத்தி தொங்குதுனு பழி சுமத்தி பணம் பறிக்கவில்லை....

    உன் உரிமையை பெறுவதில் தவறு இல்லை , நேர்மையாக தேர்வெழுதிய அனைவரையும் குறைசொல்வதின் அர்த்தம்...

    0) உன்னால் முடிந்தால் இந்த நபர், இந்த exam centre, இந்த R.NO. தவறாக எழுதினார் என்று சொல்ல முடியுமா , முடிந்தால் அந்த நபர் மீது வழக்கு தொடர்ந்து காட்டவும் ?

    1)நீ வெற்றி பெற்றிருந்தால் வழக்கு தொடுத்திருப்பாய ?

    2) ஆங்கிலத்தில் தான் தேர்வு என்று நுழைவுசீட்டில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர், அப்படி இருக்கும் பொழுது நுழைவுசீட்டு கிடைத்த அன்றே ஏன் வழக்கு தொடரவில்லை ?

    3) M.Sc.,B.ed படித்தவர்களுக்கு ஆங்கிலத்தில் புரிந்து கொள்ளும் திறமை இல்லாமல் போயிற்றா ?

    4) உன்னை நம்பி மனு அனுப்பினால் , மனு அனுப்பிய நபர் அவர் எழுதிய exam centre மீது உரிய ஆதரத்துடன் அனுப்ப வேண்டும் இல்லையெனில் வெற்றி பெற்ற தனிப்பட்ட நபர், அவர் மீது "மான நஷ்டயீடு வழக்கு" தொடர முடியும். அவ்வாறு தொடரும் பொழுது அந்த நபர் வருங்காலங்களில் தேர்வுகளில் கவனம் செலுத்த முடியாது மேலும் அவரின் வழக்கு செலவிற்கு யார் பொறுப்பு ?

    5) ஒருவேளை பொய்யான தகவல் கொடுக்கும் பொழுது நேரடி விசாரணைக்கு செல்ல வேண்டும்.அப்பொழுது உங்களின் உண்மைமுகம் மற்றவர்களுக்கு தெரியும்.

    6) ST-67.78, SCA-69.8, MBC - 78.8
    BC- 82.8 ,BCM-76.8,GT-86.8 இதில் பொது மதிப்பெண் நான்கு கழித்து விடவும். st- 67-4= 63,sc -69-4=65,MBC -78-4=74, BC-82-2= 78, BCM-76-4=72 gt-86-4=81 (பொது மதிப்பெண் அளிக்கவில்லை எனில் ,st,sc,mbc, vacant backlog சென்றுயிருக்கும்) ஆக இதில் இருந்தே தெரிகிறது முறைக்கேடு நடக்கவில்லை என்று.

    7) நீ மனு அளிக்கும் ........ "நவீன ஊ...லின் தந்தை" யார் என்று தமிழ்நாட்டிற்கு தெரியும் அவர்களை நீ பின்பற்றுவதால் நீ demand ஆக பெற்ற இலச்ச(lac) கணக்கான பணத்திற்கு கணக்கு சொல்லிவிடுவாய்.

    8) நீ அரசியல் செய்வதற்கு மற்றவர் வாழ்கைதான் கிடைத்ததா?

    9) இந்த வழக்கு முடிந்தவுடன் அனைத்திற்கும் ஒரு முடிவு வரும்....

    ردحذف
  2. நேர்மையான முறையில் தேர்வு எழுதிய உங்களைப் போன்றவர்கள் மீது வழக்கு இல்லை பல இடங்களில் நேர்மையான முறையில் தேர்வு நடத்தப்படவில்லை.கூட்டாக வரிசை எண் படி உட்காராமல் தேர்வு எழுதியது குற்றமில்லை தேர்வில் கவனம் செலுத்த இயலாமல் போனதும் குற்றமில்லை . footage தர மையங்கள் மறுப்பதும் குற்றமில்லை நன்றி

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة