பிப்.,28 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، فبراير 18، 2021

Comments:0

பிப்.,28 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் அறிவித்துள்ளார். தமிழக அரசின் திட்டம்: தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பை வழங்குவதற்கு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் வேலை தேடும் நபர்கள் கலந்து கொண்டு அவர்களின் தகுதிக்கு ஏற்ப பணியில் அமர்த்தப்படுவார்கள்.

Cut-off seniority dates adopted for nomination in Employment Offices - December, 2020 - PDF

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் பிப்ரவரி 28ம் தேதி நடக்க இருக்கிறது. வேலை வாய்ப்பு முகாமை அமைச்சர் பி. தங்கமணி அவர்கள் தொடங்கி வைக்கிறார். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அவர் கைப்பட பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். வேலைவாய்ப்பு: இந்த முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும் படித்தவர்கள், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், தையல் பயிற்சி, நர்சிங் பயிற்சி போன்ற பயிற்சிகளை முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம்.

மாண்புமிகு தமிழக முதல்வரின் இன்றைய அறிக்கை - 18.02.21 - PDF

முகாமில் கலந்து கொள்வதற்கு முன்னர் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். முகாமில் 200 மேற்பட்ட நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணி இடங்களை நிரப்ப உள்ளது. மேலும் தகவல்களை பெற விரும்பினால் 04286-222260 எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் அவர்கள் அறிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة