ஆவின் பணி நியமனங்களுக்கு எதிரான மனு தள்ளுபடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، فبراير 25، 2021

Comments:0

ஆவின் பணி நியமனங்களுக்கு எதிரான மனு தள்ளுபடி

மதுரை ஆவின் பணி நியமனங்களை ரத்து செய்யக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரையை சேர்ந்த கணேசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
1-1-2019ஆம் ஆண்டு முன்னுரிமை பட்டியலின்படி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்து இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்
மதுரை ஆவினில் சுமார் 62 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இப்பணி நியமனங்களுக்கு தேர்வு நடத்தப்படவில்லை. லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு முறைகேடாக பணியிடங்களை நிரப்பியுள்ளனர். எனவே இந்த நியமனங்களை ரத்து செய்து, முறையாக அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு நடத்தி பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், முறையாக அறிவிப்பு வெளியிட்டு எழுத்துத்தேர்வு நேர்முகத்தேர்வு நடத்தியே ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு அவர்கள் பணியிலும் சேர்ந்துவிட்டனர்.
" The India Toy Fair 2021 " பிப்ரவரி மாதம் 27.02.2021 முதல் 02.03.2021 வரை இணையதள வழியாக கண்காட்சி - பள்ளிகள் கலந்து கொள்ள உத்தரவு.
மனுதாரர் அதிகாரிகளை மிரட்டி பணம் பெறும் நோக்கில் ஈடுபட்டதாக போலிஸில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة