மத்திய அரசு நிதி உதவி அளிக்கும் படிப்புகளில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்றுமாறு தமிழக பல்கலைக்கழங்களுக்கு நிர்பந்திக்கப்படுகின்றதா?.. ஐகோர்ட் கேள்வி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 15, 2021

Comments:0

மத்திய அரசு நிதி உதவி அளிக்கும் படிப்புகளில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்றுமாறு தமிழக பல்கலைக்கழங்களுக்கு நிர்பந்திக்கப்படுகின்றதா?.. ஐகோர்ட் கேள்வி

மத்திய அரசு நிதி உதவி அளிக்கும் படிப்புகளில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்றுமாறு தமிழக பல்கலைக்கழகங்கள் மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகின்றனவா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அண்ணா பல்கலை.யில் எம்.டெக்.பயோடெக்னாலஜி, கம்புடேஷனல் படிப்பு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு நிதி உதவி அளிக்கும் படிப்புகளில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்றுமாறு தமிழக பல்கலை.,கள் மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகின்றனவா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அண்ணா பல்கலையில் எம்.டெக் பயோடெக்னாலஜி, கம்ப்யூடேஷனல் ஆகிய இரு படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இல்லை என்று அந்நாள் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சித்ரா மற்றும் குழலி என்ற மாணவிகள் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தனர். இந்த மனுவில்; தமிழக அரசின் 69% இடஒதுக்கீட்டு முறைக்கு பதில் மத்திய அரசின் 50% இடஒதுக்கீட்டு கொள்கை பின்பற்ற நிர்பந்திக்கப்பதன் காரணமாகவே அந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை கிடையாது என அறிவித்ததாகவும், அதற்காக தான் அந்த படிப்பு நிறுத்தப்பட்டதாகவும், மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது; மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; மத்திய அரசு நிதியுதவி செய்யும் படிப்புகளுக்கு தமிழகத்தில் உள்ள வேறு சில பல்கலைக்கழகங்கள் மத்திய அரசின் இடஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை நடத்தியுள்ளதாகவும், அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்கள் நலன்கருதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா?

அப்போது குறுக்கிட்ட நீதிபதி; பல பல்கலைக்கழகங்கள் புதிய படிப்புகளை உருவாக்கும் போது அண்ணா பல்கலை. மட்டும் 25 ஆண்டாக நடக்கும் படிப்பை நிறுத்தியுள்ளது. யுஜிசி விதிகளில் மாநில இட ஒதுக்கீட்டை பின்பற்ற அறிவுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்றும்படி மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகிறதா என மத்திய அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அரசு தரப்பில் அப்படிப்பட்ட எண்ணம் ஏதுமில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி, எந்த இட ஒதுக்கீட்டை பின்பற்றுவது என தமிழக அரசிற்கு கடிதம் எழுதியது ஏன் என அண்ணா பல்கலைகழகத்திற்கும் கேள்வி எழுப்பினார். மேலும், மத்திய அரசு இடஒதுக்கீட்டை பின்பற்றும்படி எழுதப்பட்ட கடிதம் தான் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் நடைபெற்றுள்ள அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் என நீதிபதி குற்றம்சாட்டியுள்ளார். நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு (5%) வழங்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குநரால் 2018ம் ஆண்டு பள்ளிக் கல்வி இயக்குநருக்கு கோரிக்கை விடப்பட்ட கடிதம் - PDF

நிறுத்தப்பட்ட படிப்புகள் மூலம் எத்தனை நிபுணர்கள் உருவாகியுள்ளனர் என ஆய்வு செய்து தெரிவிக்க மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளார். எம்.டெக். மாணவர் சேர்க்கை விவகாரம் குறித்த தெளிவான விளக்கத்துடன் வரும்படி மத்திய அரசிற்கு அறிவுறுத்தியும், யுஜிசி-யை வழக்கில் எதிர் மனுதாரராக இணைத்தும் உத்தரவிட்டுள்ளனர். இரு பிரிவுகளில் தலா 45 மாணவர்களை அனுமதிப்பதற்கான பேச்சுவார்த்தையை ஏ.ஐ.சி.டி.இ-யுடன் உடனடியாக மேற்கொள்ளும்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் உத்தரவிட்டு வழக்கை நாளை (பிப்ரவரி 16) ஒத்திவைத்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews