சென்னையில் ஆசிரியர்கள் 2 பேருக்கு கொரோனா - தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 23, 2021

Comments:0

சென்னையில் ஆசிரியர்கள் 2 பேருக்கு கொரோனா - தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை

சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜார்ஜ்டவுன் பகுதியில் உள்ள தனியார் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், இரண்டு ஆசிரியர்களுக்கு தொற்று உறுதியானது. இந்த இரு ஆசிரியர்களும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கவில்லை. எனினும், இவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற ஆசிரியர்களிடம் பரிசோதனை மேற்கொண்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலத்தை தொடர்ந்து கொரோனா தொற்று சென்னை ஆசிரியர்களையும் பாதித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews