தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மாணவர்களுக்கு வழங்க 4 கோடி ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் 19ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளன. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில், மாணவர்களுக்கு, மாத்திரைகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 4 கோடி மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘மாணவர்களுக்காக,4 கோடி மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவை, அனைத்தும் பள்ளி கல்வித் துறைக்கு வழங்கப்பட்டுள்ள உரிய வழிக்காட்டுதல்படி மாணவர்களுக்கு வழங்கப்படும்’என்றனர்.
بحث هذه المدونة الإلكترونية
الخميس، يناير 14، 2021
Comments:0
மாணவர்களுக்கு வழங்க 4 கோடி ஜிங்க், வைட்டமின் மாத்திரைகள் தயார்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.