'சட்டக்கல்வி நுழைவு தேர்வை திரும்ப பெற வேண்டும்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 09, 2021

Comments:0

'சட்டக்கல்வி நுழைவு தேர்வை திரும்ப பெற வேண்டும்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதுநிலை சட்டக்கல்விக்கு அகில இந்திய நுழைவு தேர்வு என்ற அரசிதழ் அறிவிப்பை இந்திய பார் கவுன்சில் உடனே திரும்ப பெற வேண்டும்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:முதுநிலை சட்டப்படிப்பிற்கு இனிமேல் 'நீட்' தேர்வு போன்று அகில இந்திய நுழைவு தேர்வு நடத்தப்படும் என இந்திய பார் கவுன்சில் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மாநில உரிமைகளுக்கு விரோதமாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும் முதுநிலை சட்டக் கல்விக்கு அகில இந்திய நுழைவு தேர்வு என மாநில அரசுகளை கலந்து ஆலோசித்து கருத்து அறியாமல் வெளியிடப்பட்டுள்ள இந்த அரசிதழ் அறிவிப்பை இந்திய பார் கவுன்சில் உடனே திரும்ப பெற வேண்டும்.ஏழை எளிய நடுத்தர மாணவர்களும் சட்டக்கல்வி பெறும் வகையில் அரசு சட்ட கல்லுாரிகளின் தரத்தை உயர்த்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவிட வேண்டும் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews