தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 வாக்குப்பதிவு அலுவலர்கள் (Polling Personnel) விவரங்கள் கோருதல் சார்பாக - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள் 16.12.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 17, 2020

Comments:0

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 வாக்குப்பதிவு அலுவலர்கள் (Polling Personnel) விவரங்கள் கோருதல் சார்பாக - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள் 16.12.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
//தேர்தல் அவசரமா
இராணிப்பேட்டை முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க. எண். 2419 /ஆ2/2020 நாள் 16.12.2020
பொருள் : தேர்தல் - இராணிப்பேட்டை மாவட்டம் தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 வாக்குப்பதிவு அலுவலர்கள் (Polling Personnel) விவரங்கள் கோருதல் சார்பாக. 1. இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பார்வை:
கடிதம் ந.க.எண் 1/9926/2020 நாள். 12.2020
2. தமிழக மாநில தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலாளர் அவர்களின் கடித எண் . 7000/2020-2 பொது (தேர்தல்கள்- III) துறை நாள். 01.12.2020
பார்வையில் காணும் கடிதத்தின் மீது தங்களின் கவனம் கொண்டு வரப்படுகிறது பார்வை (1) ல் காணும் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதத்தின்படி வரவிருக்கும் தமிழக சட்ட மன்ற தேர்தல் 2021 ல் பணிபுரியவிருக்கும் வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் இதர தேர்தல் குழுக்களுக்கான அலுவலக துறைத்தலைவர் முதல் கடைநிலை ஊழியர்கள் உட்பட அனைத்து அலுவலர்களின் விவரங்களையும் இத்துடன் இணைப்பட்டுள்ள படிவத்தில் (எந்த கலமும் விடுபடாமல்) எதிர்வரும் 21.12.2020ம் தேதிக்குள் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரக தேர்தல் பிரிவில் தவறாமல் சமர்பிக்க அறிவுருத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், தங்கள் நிர்வாக வரம்பிற்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அலவலகப் பணியாளர்கள் சார்பான பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சார்ந்த அலுவலகங்களில் 18.12.2020 அன்று பிற்பகல் 2.00 மணிக்குள்ளாக பெற வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட படிவங்களை தொகுத்து 18.12.2020 அன்று மாலை 5.00 மணிக்குள்ளாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலவலர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனிநபர் மூலமாக நேரில் ஒப்படைக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தங்கள் கல்வி மாவட்டம் மற்றும் வட்டார அளவில் பள்ளிகளில் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், அனைத்து வகை ஆசிரியர்கள், மற்றும் அலுவலகப்பணியாளர்கள் அனைத்து நபர்களின் பெயரும் விடுதலின்றி சேர்க்கப்பட்டுள்ளது என்பதற்கான (Non Omission Certificate) சான்றிதழினை இவ்வலுவலத்தில் ஒப்படைக்க மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு
1. படிவம்
2. Non Omission Certificate.
ஓம்...இரா.மதன்குமார்,
முதன்மைக்கல்வி அலுவலர்
இராணிப்பேட்டை
பெறுநர்
1. மாவட்டக் கல்வி அலுவலர்கள் இராணிப்பேட்டை மாவட்டம்
2. வட்டாரக் கல்வி அலுவலர்கள் இராணிப்பேட்டை மாவட்டம்,
நகல்
அனைத்து வகை அரசு மற்றும் அரசு
தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நிதியுதவி
ஆசிரியர்கள் (உரிய வழியாக) இராணிப்பேட்டை மாவட்டம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews