ஊழியர் ஊதிய உயர்வு அறிக்கை கேட்கிறார் அமைச்சர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 17, 2020

Comments:0

ஊழியர் ஊதிய உயர்வு அறிக்கை கேட்கிறார் அமைச்சர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ரேஷன் கடை ஊழியர் ஊதிய உயர்வு நிர்ணயம் மற்றும் கூட்டுறவு சங்க ஊழியருக்கு, ஓய்வூதியம் வழங்குவது குறித்து பரிசீலிக்க அமைக்கப்பட்ட குழுவிடம், விரைந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, அமைச்சர் ராஜு அறிவுறுத்தியுள்ளார்.
கூட்டுறவு துறையின் கீழ் நடத்தப்படும், 33 ஆயிரம் ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான, ஊதிய உயர்வு ஒப்பந்தம், நவ., மாதத்துடன் முடிவடைந்தது. பேச்சுபுதிய ஊதியம் நிர்ணயம் செய்வது குறித்து பரிசீலிக்க, மாநில தலைமை கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. அக்குழு, ரேஷன் ஊழியர்கள் தொழிற்சங்க நிர்வாகிகளிடம், நவ., மாதம் பேச்சு நடத்தியது. அதேபோல், 4,449 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதியமும்; ஓய்வு பெற்றவருக்கு கருணை ஓய்வூதியமும் வழங்குவது குறித்து பரிசீலிக்க, தலைமை கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் தலைமையில், மற்றொரு குழு அமைக்கப் பட்டது. அக்குழுவும், தொழிற்சங்க நிர்வாகிகளிடம், சில தினங்களுக்கு முன் பேச்சு நடத்தியது. ஆலோசனை இந்நிலையில், ஊதிய நிர்ணயம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது குறித்து அமைக்கப்பட்ட குழுவிடம், சென்னை, தலைமை செயலகத்தில், கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு, துறை உயரதிகாரி கள், நேற்று ஆலோசனை நடத்தினார்.அக்குழுவிடம், ரேஷன் கடை ஊழியருக்கு புதிய ஊதியம், கூட்டுறவு சங்க ஊழியருக்கு ஓய்வூதியம் தருவதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, விரைந்து சமர்ப்பிக்குமாறு, அமைச்சரும், அதிகாரிகளும் அறிவுறுத்தி உள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews