கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க கல்லுாரிகளுக்கு யோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، ديسمبر 19، 2020

Comments:0

கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க கல்லுாரிகளுக்கு யோசனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''கல்லுாரிகளில் கொரோனா விதிகளை, முறையாக கடைபிடிக்க வேண்டும்,'' என, இந்திய மருத்துவ சங்கத்தின், அகில இந்திய துணைத்தலைவர் ராஜா தெரிவித்தார்.
ஈரோட்டில் அவர் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால், கல்லுாரி திறக்கப்பட்ட நிலையில் சென்னை ஐ.ஐ.டி., உட்பட சில கல்லுாரியில் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கல்லுாரிகளில் விதிகளை முழு அளவில் கடைபிடித்தால் மட்டுமே, கொரோனா பரவலை தடுக்க முடியும். உரிய விதிகளுடன் வகுப்பு நடத்த வேண்டும்.மாணவர், ஆசிரியர்களின் பிற கலந்துரையாடல்களை போன், மெயில் போன்றவற்றில் வைத்து கொண்டால், கொரோனா பரவலை தடுக்கலாம். இருப்பினும் கல்லுாரி மாணவர்களுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும். பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு தொடங்க வேண்டும்.கொரோனா காலத்தில், தமிழகத்தில், 58 டாக்டர்கள் இறந்துள்ளனர். அவர்களை முன்னிலை பணியாளர்களாக கருதி, நிவாரணம் வழங்க கோரினோம். தற்போது, 25 டாக்டர்களுக்கு தலா, 25 லட்சம் ரூபாய் வரை அரசு வழங்கவுள்ளது.மற்றவர்களுக்கும் வழங்க பரிந்துரை செய்துள்ளோம். தமிழக அரசின் மினி கிளினிக் திட்டத்தை வரவேற்கிறோம். இதனால் மருத்துவ வசதி கிடைக்காத பகுதியில் உள்ளவர்களுக்கு, சேவை கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة