கல்லூரிகளில் 6,344 மாணவர்களுக்கு சோதனை 210 பேருக்கு கொரோனா: 3,773 பேருக்கு தொற்று இல்லை; 2,361 முடிவுகள் வரவேண்டியுள்ளது; மாநகராட்சி தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 18, 2020

Comments:0

கல்லூரிகளில் 6,344 மாணவர்களுக்கு சோதனை 210 பேருக்கு கொரோனா: 3,773 பேருக்கு தொற்று இல்லை; 2,361 முடிவுகள் வரவேண்டியுள்ளது; மாநகராட்சி தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னையில் உள்ள கல்லூரிகளில் 6,344 பேருக்கு கொரோனா சோதனை செய்ததில் 210 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,773 பேருக்கு தொற்று இல்லை என்றும், இன்னும் 2,361 பேரின் முடிவுகள் வரவேண்டியுள்ளது என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தளர்வில் ஒன்றாக கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு, ஆராய்ச்சி மாணவர்களுக்காக பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை ஐஐடியில் பயிலும் மாணவர்கள் மற்றும் விடுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சமீபத்தில் கொரோனா உறுதியானது. இதையடுத்து முதல்கட்டமாக நடந்த சோதனையில் 104 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மாநகராட்சி சுகாதார துறை சார்பில் 2ம் கட்டமாக நடந்த சோதனையில் மேலும் 79 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 மாணவர்களுக்க கொரோனா உறுதியானது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுகாதார துறையினர், தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என அறிவித்து. சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள கல்லூரிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள கல்லூரி மாணவர்களுக்குக் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து நேற்று சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில்: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் கல்லூரி மாணவர்கள் மொத்தம் 6,344 பேருக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 210 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,773 பேருக்கு இல்லை. மேலும் 2,361 பரிசோதனை முடிவுகள் வரவில்லை. கொரோனா பரிசோதனை செய்ததில் 1 முதல் 10 மண்டலங்கள் வரை இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை. ஆனால் அதிகபட்சமாக 13 வது அடையாறு மண்டலத்தில் 2,498 பேருக்கு சோதனை செய்யப்பட்டத்தில் 200 பேருக்கும், 11வது வளசரவாக்கம் மண்டலத்தில் 248 பேருக்கு சோதனை செய்ததில் 5 பேருக்கும், 15வது சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 386 பேருக்கு சோதனை செய்ததில் 3 பேருக்கும், 12வது ஆலந்தூர் மண்டலத்தில் 41 பேருக்கு சோதனை செய்ததில் 1 நபருக்கும், 14வது பெருங்குடி மண்டலத்தில் 219 பேருக்கு சோதனை செய்ததில் 1 நபருக்கும் என 210 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews