தேசிய இளைஞர் விழா - பல்வேறு போட்டிகள் - மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، ديسمبر 27، 2020

Comments:0

தேசிய இளைஞர் விழா - பல்வேறு போட்டிகள் - மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் விடுத்துள்ள அறிக்கை. மத்திய அரசு இளைஞர்களின் திறமையை மேம்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12ம் தேதி தேசிய இளைஞர் விழா கொண்டாடுகிறது. இதையொட்டி, மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதற்காக நியமிக்கப்பட்ட குழுவினர் மூலம் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த மாவட்ட தேர்வு போட்டிகளில் தனிநபர் பிரிவில் 11, குழு பிரிவில் 7 என நடக்கும். பாரம்பரிய இசை, நடனம், உடை அலங்காரம், நாடகம், காட்சி கலைகள், எழுத்தாற்றல் ஆகியவை உள்ளடக்கியது. வரும் 31ம் தேதியன்று 15 முதல் 29 வயது நிரம்பிய மாணவ, மாணவிகள், மாணவர் அல்லாதவர்கள் (ஆண், பெண்) கலந்து கொள்ளலாம். மத்திய அரசு வழிகாட்டுதல்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, போட்டிகள் நடத்தப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெறுவோர், மாநில அளவிலான போட்டிகளிலும், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெறுவோர், தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவில் வரும் 29, 30 ஆகிய தேதிகளிலும், மாநில அளவில் ஜனவரி 5 முதல் 8 வரையும், தேசிய அளவில், ஜனவரி 12 முதல் 19 வரையும் போட்டிகள் நடக்கும். போட்டி முடிவுகளை அந்தந்த மாவட்ட நடுவர்கள் தீர்மானிப்பர். போட்டியாளர்கள் தங்களுக்கு தேவையான உபகரணங்களை எடுத்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை அலுவலக நேரங்களில் 7401703481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة