நீட் தேர்வுக்கான ஓ.எம்.ஆர் விடைத்தாளில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 11, 2020

Comments:0

நீட் தேர்வுக்கான ஓ.எம்.ஆர் விடைத்தாளில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தேர்வு முடிந்த பின் அக்டோபர் மாதம் 5ம் தேதி தேசிய தேர்வு முகமை அதன் இணையதளத்தில் ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை வெளியிட்டது. இதில் முதலில் 700க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாக காட்டிய நிலையில், அக்டோபர் 17ம் தேதி திடீரென தன் மதிப்பெண்களை 248 ஆக குறைத்து ஓ.எம்.ஆர். வெளியிடப்பட்டதாக கோவையை சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 594 என்பதையே தன் நீட் மதிப்பெண் என்று கணக்கிட்டு, கவுன்சலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென்று கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. தேசிய தேர்வு முகமை சார்பில் மாணவரின் அசல் ஓ.எம்.ஆர் விடைத்தாள் சம்மந்தப்பட்ட மாணவரிடம் காண்பிக்கப்பட்டது. அசல் விடைத்தாளில் அக்டோபர் 17ம் தேதி இணையதளத்தில் காட்டியதாக கூறப்படும் 248 மதிப்பெண்ணை மட்டுமே மாணவர் பெற்றுள்ளதாக கூறப்பட்டிருந்தது. சம்மந்தப்பட்ட மாணவர் தன் கூகுள் கணக்கில் இருந்து மீட்டெடுத்த தரவுகளை அடிப்படையாக கொண்ட கூடுதல் பதில்மனுவைத் தாக்கல் செய்தார். அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் எடுத்த ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்களையும் (594 மதிப்பெண்) மாணவர் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.ரவி தாக்கல் செய்தார். மாணவரின் தாக்கல் செய்த இந்த ஆவணங்கள் சந்தேகத்தை கிளப்புவதாக தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் 16 ம் தேதி வரை காட்டப்பட்ட 594 மதிப்பெண்கள், திடீரென அக்டோபர் 17ம் தேதி 248 ஆக குறைந்தது எப்படி. இது அதிர்ச்சியை அளிக்கிறது. மின்னணு முறையிலான இது போன்ற விவகாரங்களில் யாரும் திருத்தம் செய்யவோ, ஊடுருவவோ முடியாது என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாத சூழல் உள்ளது. அது சாத்தியம் எனும் பட்சத்தில் இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும். இது தொடர்பாக உடனடி விசாரணை தேவை. ஓ.எம்.ஆர் விடைத்தாளில் திருத்தம் செய்ய முடியும் எனும் பட்சத்தில் இது ஒட்டுமொத்த தேர்வு முறையிலும் சிக்கலை ஏற்படுத்தும். இது எதிர்கால மருத்துவர்கள் மட்டுமல்லாமல் எண்ணற்றவர்களின் வாழ்வும் சம்மந்தப்பட்டுள்ளது. எனவே, ஒரே மாணவருக்கு இரண்டு விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது, மதிப்பெண் எப்படி வேறுபட்டது என்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளை அடிப்படையாக கொண்டு விரிவாக விசாரணை நடத்தி சீலிட்ட கவரில் அறிக்கையை தேசிய தேர்வு முகமை தாக்கல் செய்ய வேண்டும். தற்போதைய நிலையில், மாணவர் முதலில் பெற்றதாக கூறும் 594 மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு அவரை மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க மருத்துவக் கல்வி இயக்குனர் அனுமதிக்க வேண்டும். மனுதாரருக்கு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்கும் பட்சத்தில் அதை இறுதி செய்யக் கூடாது. அது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார். ஓ.எம்.ஆர் விடைத்தாளில் திருத்தம் செய்ய முடியும் எனும் பட்சத்தில் இது ஒட்டுமொத்த தேர்வு முறையிலும் சிக்கலை ஏற்படுத்தும். இது எதிர்கால மருத்துவர்கள் மட்டுமல்லாமல் எண்ணற்றவர்களின் வாழ்வும் சம்மந்தப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews