திருச்சி: தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 10 மாதமாக வழங்க முடியாத நிலையில் சம்பளத்தை உடனடியாக வழங்க ஏதுவாக, இலவச கட்டாய கல்வி திட்ட நிலுவை தொகை ரூ.300 கோடியை விடுவிக்க வேண்டும் என தனியார் பள்ளி தாளாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளி தாளாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஸ்ரீதர் : தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் பல பிரச்னைகள் உள்ளன. இவற்றை சரிசெய்ய வேண்டும் என்பதற்காக புதிதாக ஒரு சங்கத்தை நாங்கள் உருவாக்குகின்றோம்.
தமிழகம் முழுவதும் பல்வேறு தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் இந்த உயர் மட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்களுக்கு கடந்த 10 மாதமாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க 2019- 20 ம் ஆண்டிற்கான இலவச கட்டாயக் கல்வி நிலுவைத் தொகை ரூ.300 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் சுமார் 13 ஆயிரம் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது - தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க அரசு ஆவணம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும் பள்ளிகள் நிரந்தர அங்கீகாரம் வழங்க டிடிசிபி அப்ரூவல் பெறுவது பெரிய பிரச்னையாக உள்ளது, இந்த சிக்கலை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நிரந்தரம் ஆக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதற்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.