பொதுத்தேர்வு பயம் - தினகரன் தலையங்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 13, 2020

Comments:0

பொதுத்தேர்வு பயம் - தினகரன் தலையங்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்து தமிழக கல்வித்துறை எடுத்து வரும் நிலைப்பாடுகள் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து தமிழகத்தில் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் நவ. 16ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையொட்டி பள்ளிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டங்களில் பள்ளி திறக்க பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளைத் திறக்கக்கூடாது. அப்படி திறந்தால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். பள்ளிகளைத் திறப்பதில் தமிழக அரசு அவசரம் காட்டக்கூடாது என்றும், கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்த பின்பு பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வேண்டும் என்றும் பெற்றோர், அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி விட்டது. சமீபத்தில் கொரோனா பாதிப்பும் அதிகரித்துள்ளது. இப்பிரச்னை தொடர்பான வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘கொரோனாவால் தற்போது இரண்டாம் அலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கலாமே’’ என்று கேள்வி எழுப்பியிருந்தது. இதன் தொடர்ச்சியாக, நவ. 16ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்ற உத்தரவை தமிழக அரசு நேற்று ரத்து செய்துள்ளது. அத்துடன், அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள், முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் டிச. 2ம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாவிட்டாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகின்றன. பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர் பாடம் நடத்துவதற்குப் பதில், யூடியூப் மூலம் தான் பாடம் நடத்தப்படுவதாக புகார் உள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவ, மாணவியர் அனைவருக்கும் ஆன்லைனில் படிக்கும் வசதி கிடைக்கவில்லை. குறிப்பாக, அரசு பள்ளி கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளைச் சந்திக்க ஆன்ட்ராய்ட் மொபைல் போன் வசதியில்லாமல் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அச்ச உணர்வு 10, 12 படிக்கும் மாணவர்கள் மத்தியில் பெரும் மனநெருக்கடியை உருவாக்கியுள்ளது. ஆசிரியர், மாணவர் உறவே ஆறு மாதங்களுக்கு மேல் இல்லாத நிலையில், பாடத்திட்டங்களில் சந்தேகம் என்றால், யாரிடம் கேட்பது என்ற மனஉளைச்சல் மாணவர்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் பொதுத்தேர்வு என்ற பூதம் மாணவர்களை மிரட்டி வருகிறது. இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து என மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் அங்கும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படாத நிலை உள்ளது. எனவே, தமிழக அரசும் இந்த ஆண்டு 10, 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். மாணவர்கள் கடைசியாக எழுதிய தேர்வை மதிப்பிட்டு, அவர்கள் மேற்படிப்பு படிப்பதற்கான பாடங்களைத் தேர்வு செய்வதற்கு வழிவகை செய்வதே சாலச்சிறந்தது என்ற கல்வியாளர்களின் குரலுக்கு செவி சாய்க்குமா தமிழக அரசு? 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews