தமிழகத்தில் தேர்வு மையங்கள் அமைக்க பிரதமருக்கு முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، نوفمبر 17، 2020

Comments:0

தமிழகத்தில் தேர்வு மையங்கள் அமைக்க பிரதமருக்கு முதல்வர் இ.பி.எஸ்., கடிதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதுநிலை மருத்துவ படிப்புக்கான, ஐ.என்.ஐ., -- சி.இ.டி., நுழைவுத் தேர்வுக்கு, தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஏற்படுத்த சுகாதாரத் துறைக்கு உத்தரவிட வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி உட்பட சில கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவ படிப்பில், மாணவர்களை சேர்க்க, ஐ.என்.ஐ.,- - சி.இ.டி., என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, வரும், 20ம் தேதி நடக்க உள்ளது. தேர்வு எழுத உள்ள, தமிழக மாணவர்களுக்கு, ஆந்திர மாநிலத்தில் உள்ள, சித்துார், நெல்லுார் மாவட்டங்களில், தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களுக்கு, தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து, முறையாக இணைப்பு இல்லை. தமிழக மாணவர்கள், 17௫ முதல், 250 கி.மீ., பயணித்து, அங்கு செல்ல வேண்டியுள்ளது.இதை தடுக்க, தமிழகத்தில், கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்தும்படி, சுகாதாரத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.ஹஜ் பயணம்பிரதமருக்கு, முதல்வர் இ.பி.எஸ்., அனுப்பியுள்ள மற்றொரு கடிதம்: ஒவ்வொரு ஆண்டும், தமிழகம் மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து, 4,500 பேர், ஹஜ் பயணம் செல்கின்றனர். அவர்கள், சென்னையில் இருந்து செல்வதற்கு வசதியாக, 1987 முதல், சென்னை விமான நிலையத்தில் இருந்து, விமானங்கள் இயக்கப்பட்டன. இம்முறை, கொரோனா காரணமாக, ஹஜ் யாத்திரைக்கு புறப்படும் இடங்களை, 21ல் இருந்து, 10 ஆக, இந்திய ஹஜ் பயணக்குழு குறைத்துள்ளது. இதில், சென்னையும் விடுபட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து, ஹஜ் பயணம் செல்லும் பயணியர், கொச்சின் செல்ல வேண்டி உள்ளது. இதனால், முதியோர் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். அதனால், சென்னையில் இருந்து நேரடியாக விமானங்கள் இயக்க, அனுமதிக்க வேண்டும். புறப்படும் இடமாக சென்னையை அறிவிக்க வேண்டும். இங்கிருந்து ஹஜ் பயணியர், கொரோனா விதிகளை பின்பற்றி, பாதுகாப்பாக புறப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, உறுதி அளிக்கிறேன்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة