சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கு 50% இடஒதுக்கீடு விவகாரம் தமிழக அரசின் அரசாணை - உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 20, 2020

Comments:0

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கு 50% இடஒதுக்கீடு விவகாரம் தமிழக அரசின் அரசாணை - உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50% இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு மருத்துவர்கள் எம்.சையது பக்ரூதீன், ஜி.குமரவேல் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்த கோரிக்கையை ஏற்று, வழக்கை முடித்து வைத்தது. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மருத்துவர் அமித் மொகந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா மற்றும் அஜய் ரஸ்தோகி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மூத்த வக்கீல் வில்சன் வாதத்தில், “இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி கவுல் தெளிவாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில் அரசு மருத்துவர்களுக்கான பிரச்னை அனைத்தும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திரும்ப திரும்ப தேவையில்லாமல் மீண்டும் நீதிமன்றத்தை சிலர் நாடி வருகின்றனர். அதனால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கு 50 சதவீத இடஒதுக்கீடு என்ற அரசாணையை இந்த வருடமே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்’’ என வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான யோகேஷ் கண்ணா, அரசாணையை செயல்படுத்த எந்த தடையும் இல்லை. எங்களது கோரிக்கையை மற்றவைகளோடு ஒப்பிட முடியாது. முற்றிலும் வேறுபட்டதாகும் என்றார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர், தங்களது தரப்பிலும் ஒரு எஸ்.எல்.பி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், “இந்த வழக்கில் மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் அனைத்து ரிட் மனுதாரர்களும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என தெரிவித்து, வழக்கை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 50 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews